Wednesday, March 24, 2010

என் (நம்) நண்பனுக்காக எழுதி முடிக்கப்பட வேண்டிய கடிதம்,... - 1 -


இதோ, என் கடைசி பதிவில் நான் சொல்லி இருந்தது போல் கடந்த முறை நான் என் ஊருக்கு சென்று இருந்த போது என்னை மிகவும் பாதித்த விசயத்தை பற்றி இந்த பதிவில் எழுதுகிறேன்.  நான் வேலை பார்க்கும் Hyderbad'ல் இருந்து எனது சொந்த நகரமான ஈரோட்டிருக்கு செல்ல குறைந்தது 20 -22 மணி நேரங்களாவது பிடித்து விடும். எனவே பெரும்பாலும் நான் சென்னை சென்று, அங்கிருந்து ஈரோட்டிருக்கு செல்வதை வழக்கமாக்கி வைத்திருக்கிறேன். அதே போல் இந்த முறையும் அவ்வாறே செல்லாம் என முடிவு செய்தேன். பெரும்பாலும் ரயில் பயணங்களை அதிகம் விரும்புவேன். ரயிலில் அந்த ஜன்னல் ஓர காற்றும், படிக்கட்டு பயணங்களும், தனிமையின் சுவடுகளும் என்றும் நம் மனதில் பசுமையாக நிலைத்து இருக்கும். இந்த அனைத்து சுகங்களும் ஏனோ பேருந்து பயணங்களில் நான் உணருவதில்லை. எனவே இந்த முறையும் அவ்வாறே ஒரு வெள்ளிக்கிழமை இரவு Hyderbad'ல் இருந்து கிளம்பி சென்னைக்கு பயணித்தேன். என் மனதிற்குள் நிறைய எண்ண சிதறல்களுடன் எனது  இரவை ரயில் பயணம் விழுங்கி தமிழ் சூரியனை நோக்கி பயணித்து கொண்டிருந்தது. அடுத்த நாள் முழுவதும் எனது இருப்பிடம் சென்னையாக மாற போகிறது என்பதை உணராமல் எனது விழிகள் அயற ஆரம்பித்துவிட்டது.

காலையில் உதித்த போது சென்னை சென்ட்ரல் பல்லாயிரம் கால்களோடு சேர்த்து எனது கால்களுக்கும் சிவப்பு கம்பளம் விரித்து என்னையும் வரவேற்றது. பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் வீசும் காற்றில் தமிழ் மணத்தையும் சேர்த்து முகர்ந்தேன். நான் ஈரோட்டிருக்கு  செல்ல வேண்டிய வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் வர இன்னும் குறைந்தது 2 மணி நேரமாவது இருக்கும். அந்த 120 நொடிகளையும் எப்படி கழிப்பது என்ற யோசனையில் என் அனைத்து உடமைகளையும் எடுத்து கொண்டு சென்ட்ரலுக்கு உள்ளே செல்கையில் அங்கிருந்தே ஒரு கடையில் எழுதபட்டிருந்த வாசகத்தை பார்த்த போது அவனது ஞாபகம் வந்தது. அந்த வாசகம் பாரதியின் என்றும் அழியா கவிதைகளில் ஒன்று:
" தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? "
இதை வாசித்ததும் எனது மூலையில் உள்ள நினைவுகளை சில நொடி பொழுதில் தூசி தட்டி, என் வாழ்கையின் பக்கங்களை புரட்டி என் அன்பு தோழன் பிரசாந்தின் வீட்டை  நினைவுபடுத்தியது எனது மனம். 
காரணம் அவனது வீட்டின் முகப்பில் எழுத பட்டிருக்கும்  இந்த வாசகம். பாரதியாரின் நம்பர் 1 ரசிகன் அவன். ஒவ்வொரு முறையும் அவனது இல்லதிருக்கு செல்லும் போது அவனது அம்மாவையும் சேர்த்து என்னை வரவேற்பது இந்த வாசகம் தான். எனவே அவனையும் சரி, அவன்  இல்லத்தையும் சரி இந்த வாசகத்தை  சென்னை சென்ட்ரலில் பார்த்த போது ஞாபகம் படுத்தியது. பிரசாந்த்.. யார் இந்த பிரசாந்த்? என்று என் பல நண்பர்கள் இந்த பதிவை படிக்கும் போது கண்டிப்பாக அவர்களுக்குள் கேட்டு இருப்பார்கள். காரணம் இவன் எனது பள்ளியிலோ, எனது கல்லூரியிலோ என்னோடு சேர்ந்து படித்தவன் கிடையாது. எனது சில கல்லூரி நண்பர்களுக்கு இவனை  பற்றி தெரியும். காரணம் இவனது குடும்பமும், எனது குடும்பமும் கடந்த 14 வருடமாக பக்கத்துக்கு பக்க  வீட்டில் வசித்து வந்தோம்.  எங்களது நட்பும் சரி, அன்பும் சரி  இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அவனும் நானும் எங்களது நேரங்களை ஒன்றாக கழித்த காலங்கள் இன்னும் என் வாழ்வில் அழகான நினைவாக இருக்கிறது. நாங்கள் இருவரும் கல்லோரியிலாவது ஒன்றாக படிக்க வேண்டும் என்று எங்கள் பள்ளி நாட்களில் நினைத்து இருந்தோம். ஆனால் அதுவும் நடக்க வில்லை. வழக்கம் போல் பக்கத்துக்கு பக்க கல்லூரியில் படிக்க நேர்ந்தது. என்னை விடவும் மிகவும் நன்றாக படிக்கவும் , செயல் பட கூடியவன் பிரசாந்த்.  எனது கல்லூரி சம்பவங்களும் சரி, அவனது கல்லூரி  சம்பவங்களும் சரி எங்கள் இருவருக்கும் அத்துபடி. காரணம் தினமும் நாங்கள் கல்லூரி முடித்து விட்டு இரவு முழுக்க பேச வேற என்ன விஷயங்கள் இருக்கிறது?. அவன் அவனது பொறியியல் முன்றாவது வருடத்திலியே (என்னை போலவே) மென்பொருள் கம்பெனியில் தேர்வானான். அவனது கல்லூரி படிப்பு முடிந்ததுமே , அவனது மென்பொருள் கம்பெனி அவனை மும்பையில் வேலைக்கு அமர்த்தியது. அன்றில் இருந்து எங்கள் நட்பு அலைபேசியில் தொடர்ந்தது. தினமும் பேச முடியாவிட்டாலும், சனி, ஞாயிறுகளில் பேசி கொள்வோம்.

நான் சென்னைக்கு சென்றிந்த ஒரு வாரத்திற்க்கு முன்புதான் அவன் மும்பையில் இருந்து சென்னைக்கு மாற்றம் ஆகி வந்து இருந்தான். கடந்த 6   மாத காலமாக அவனுடன் பேசிய போது அவன் கொஞ்சம் வேலை இருக்கிறது, பின்பு அழைப்பதாக கூறுவான். ஆனால் அழைக்க மாட்டான். இது சனி, ஞாயிறுகளிலும் நடந்தது. பின்பு நான் அழைத்து பேசுவேன். அவனது பேச்சில் சில வருத்தங்கள் இருந்ததை என்னால் 6 மாதங்களாக   உணர முடிந்தது. பல முறை நான் கேட்டிருந்த போதும் அவன் சொன்ன ஒரே பதில் வேலை அதிகம். நானும் மென்பொருள் துறையில் இருப்பதால் அதை நம்ப  முடிந்தது. ஆனால் அவனது கடந்த 6 மாத கவலைக்கும் காரணம் அவனது வேலை பளு அல்ல என்பதும் அதற்கான உண்மையான காரணம் அவனிடம் நேரில் சென்னையில் பேசிய போதுதான் எனக்கு தெரிய வந்தது. அவனுடன் சென்னையில் நடந்த சந்திப்பு, என் முழு நாளும் சென்னையில் கழிந்த காரணம் என அனைத்து காரணங்களுக்கும் பதில் அடுத்த பதிவில்.
வேண்டும் என்றால் அவனது கவலைக்கான காரணத்தை மட்டும் கூறுகிறேன் அதற்கு காரணம் திவ்யா. அவனது திவ்யா.
தொடரும். . . கடிதத்திற்கான முன்னுரை தொடரும் . . .
(தொடரும்...)  





Tuesday, March 16, 2010

மனிதர்களுக்கும் வேண்டும் ரீ-சார்ஜ் !


ஹலோ, ஹலோ ..... அவ்வளவுதான் நமது மொபைலின் சார்ஜ் தீர்ந்து விட்டது. உடனே நாம் நமது மொபைலை ரீ-சார்ஜ் செய்து மறுபடியும் புத்துணர்ச்சி உடன் நமது பேச்சை தொடங்குவோம். உயிர் அற்ற நமது மொபைலுக்கே அவ்வபோது ரீ-சார்ஜ் தேவை படும் போது, காலம் நேரம் பார்க்காமல், பல்லாயிரம் கீ. மீ உறவுகளை தாண்டி வேலை செய்து வரும் நமக்கும் அவ்வபோது புத்துணர்ச்சி பெற ரீ-சார்ஜ் தேவை படுகிறது. இதோ நானும் கடந்த மாதத்தில் எனது ஊருக்கு சென்று ஒரு வாரம் தங்கி விட்டு புத்துணர்வுடன் மீண்டும் எனது வழக்கமான வேலைக்கு திரும்பி இருக்கிறேன். அதுவும் இந்த முறை நான் ஊருக்கு சென்ற போதும், கடந்த முறை ஊருக்கு சென்று வந்ததற்கும் நிறைய வித்தியாசங்கள், எனக்குள் நிறைய மாற்றங்கள். காலம் நம்மை கண்டிப்பாக மாற்றுகிறது, நம்மை மேலும் மேலும் வலுவாக்கிகிறது. இதோ  இந்த முறை நான் ஊருக்கு சென்று வந்ததில் இருந்து முக்கியமான முன்று நிகழ்வுகளை சொல்ல வேண்டும்.



 முதலாவதாக எனது நெருங்கிய தோழியின் திருமணம். பள்ளி ஆகட்டும், கல்லூரி ஆகட்டும் ஏன் இப்பொது நான் பணி புரியும் வேலை ஆகட்டும்.. எனது வாழ்வில் பெண் தோழிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவே. கண்டிப்பாக விரல் விட்டு எண்ணி விடலாம். சிறு வயதில் இருந்தே நான் அப்படிதான் இருந்து இருக்கிறேன். அத்தகைய ஒரு கல்லூரி தோழியின் திருமணதிற்கு சென்றேன். மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கும், விடிய காலை முகூர்ததிர்க்கும் சென்று அவளை வாழ்த்தி விட்டு வந்தேன். புதன், வியாழன் என்பதால் என்னவோ என் நண்பர்களின் வட்டத்தில் யாரும் வரவில்லை. மொத்தமே 5 - 6  நண்பர்கள்தான் வந்திருந்தார்கள். நான் என் வாழ்கையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கும், விடிய காலை முகூர்ததிர்க்கும் சென்ற முதல் (நண்பர்களின் வட்டத்தில்) திருமணம் இதுதான். கண்டிப்பாக அவளது  திருமணத்திருக்கு செல்ல வேண்டும் என நினைத்திருந்தேன், காரணம் கடந்த 6 மாததிருக்கு முன்பு நடந்த சில சம்பவங்களில் எனக்கு மிகவும் உதவியாக இருந்ததில் இவளும் ஒருவர். அவளது முகத்தில் இவ்வளவு வெட்கம் இருக்கிறது என்று அவளை மணமேடையில் பார்த்த போதுதான் தெரிந்தது. கல்லூரியில் இருந்தே அவள் மிகவும் துடிப்பு மிக்கவள், நன்றாகவும் படிக்ககுடியவள். Creative thinking என்பதை கல்லோரியிலே நிருபித்த அவள், அவளது திருமண பத்திரிகைளும் அவளது cretivity'ஐ காண்பித்து இருந்தாள். அவள், அவள் குடுமபத்துடன் நீண்ட நாட்கள் சந்தோசத்துடன் வாழ எனது வாழ்த்துகள். (அவள் சென்னையில் ஒரு மென்பொருள் டெஸ்டிங் (Bugs) கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாள்- அவளது பெயர் முந்தைய வரியில் இருக்கிறது.)



இரண்டாவது நிகழ்வு ஒரு புதிய நண்பனை சந்தித்தது. எனது பாச தோழனின், கல்லூரி தோழன் அவன். எனது ஊரில் இருந்து ஒரு 30 கீ.மீ தள்ளி இருக்கும் பவானியில் இருக்கிறது அவனது இல்லம். எங்களது சில வருங்கால திட்டங்களை பற்றி அவனிடம் பேசுமாறு எனது பாச தோழன் நான் ஊருக்கு செல்லும் போதே சொல்லி இருந்தான். எனவே நான் அவனது இல்லதிருக்கு என் கல்லூரி நண்பனுடன் சென்று இருந்தேன். அவனை பற்றி ஏற்கனேவே என் பாச தோழன் நிறைய சொல்லி இருக்கிறான். வாழ்கையில் சில நபர்களை பார்த்தவுடன் அந்த நபர்கள், நமக்கு நண்பர்கள் ஆகும் அளவிருக்கு சில விசயங்கள் நடக்கும். ஆனால் அவனுடன் பேசிய 1 - 2 மணி நேரங்களில் அவனும், அவனது கருத்துகளும் எனக்கு மிகவும் பிடித்து போயிற்று. அவனது சில உயர்ந்த எண்ணங்கள் எனக்கு ஆச்சிரியம் அளித்தது. "நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன்" என்ற வரிகளின் உண்மை அவனை பார்த்துவிட்டு வந்த போது எனக்கு புரிந்து இருந்தது. வருங்காலத்தில் அவனுடனும், என் பாச தோழனுடனும் சேர்ந்து செய்ய போகும் திட்டங்களை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன். Let's Rock Buddies.


முன்றாவதாக, கடந்த முறை நான் ஊருக்கு சென்ற சமயம் என் வாழ்வின் சில எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து இருந்தது. அதன் காரணமாக எனது அப்பா அம்மாவிற்கு நிறைய வலிகளையும், குழப்பத்தையும் தந்து இருந்தேன். எனவே இந்த முறை ஊருக்கு செல்லும் போதே கண்டிப்பாக அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என நினைத்து கொண்டேதான் சென்றேன். அதை பின்பற்றும் வகையில் ஊரில் இருந்த 10 நாட்களும் அவர்களுடேனே செலவளித்தேன். அவர்களிடம் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டேன். அவர்களிடம் என் மேல் இருந்த அனைத்து குழப்பங்களையும் சரி செய்தேன். என்னால் முடிந்த வரை இந்த முறை அவர்களுக்கு சந்தோசம் அளித்தேன்.அவர்களால் நானும் சந்தோசம் பெற்றேன்.


இவை அனைத்தையும் விட முக்கியமான ஒரு  நிகழ்வு, என்னை மிகவும் யோசிக்கவும் பாதிக்கவும் செய்தது. அதை பற்றி அடுத்த பதிவில்...
Related Posts with Thumbnails