Sunday, February 14, 2010

காதல் - நம் வாழ்கையை இயக்குகிறது...


இன்று ஆனந்த விகடனில் விஜய் டிவி கோபிநாத்தின் நீயும் நானும் கட்டுரையை படித்தேன். மிகவும் ரசிக்கவும், யோசிக்கவும் வைத்தது. ஒவ்வொருவரின் வாழ்கையிலும் காதல் எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்று சில பிரபலமானவர்களின் வாழ்கையை மேற்கோள் காட்டி எழுதி இருந்தார். சச்சின், நமது கிரிகெட் வாழ்கையின் பிதா மகன் என்றே கூறலாம். அவரது வாழ்கையில் காதல் எவ்வளவு அழகாக இருந்து இருக்கிறது, அந்த காதல் அவரை எவ்வளவு உயரமான சிகரத்தில் அவரை கொண்டு நிறுத்தி இருக்கிறது என்று அழகாக கூறி இருந்தார். சச்சின் நினைத்திருந்தால் அவரது வசதிக்கும், புகழக்கும் எவ்வளவு பெரிய பணக்கார குடும்பத்தில் இருந்தும் பெண்ணை மணந்து இருக்கலாம். ஆனால் தான் விமான நிலையத்தில் பார்த்த ஒரு பெண் அவரக்கு பிடித்து போகவே இருவரும் பேசி புரிந்து கொள்கிறார்கள். அவரின் மனதில் அஞ்சலி பதிந்த பிறகுதான், அஞ்சலி டாக்டர் என்றும், அவர் தன்னை விட வயதில் மூத்தவர் என்றும் தெரிய வருகிறது. அவர் இன்னும் சளைக்காமல், தடுமாறாமல் பல வெற்றி கனிகளை பறிக்கிறார் என்றால் அவரது உழைப்பையும் தாண்டி அவரது மனைவி அவர் மீது வைத்திருக்கும் காதல்தான் என்று அழகாக சொல்லி இருந்தார்.
இந்த கட்டுரையை படித்து முடித்தவுடன் என் மனதில் பல சம்பவங்கள் தோன்றின. கண் மூடி யோசித்தால் என் மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் நினைவுகள், உண்ர்ச்சிகள். அதில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.. ஆயிரம் கீ.மீ தள்ளி இருந்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு தடவையாவது என்னை தொலைப்பேசியில் அழைத்து, " இன்று உன் வேலை எப்படி சென்றது, சரியான நேரத்தில் சாப்டியா, அங்கே குளிர் அதிகமாக இருந்தால் ஸ்வெட்டர் போட்டுக்கோ, வெளிய இரவில் அதிக நேரம் சுற்றாத, உடம்ப பார்த்துக்கோ, பத்திரமா இரு" என்று இன்னும் இந்த 23 வயது வாலிபனை, குழந்தை போல் நினைத்து என்னை அன்போடு விசாரிக்கும் என் அம்மாவின், அப்பாவின் காதல் என்னை என் வாழ்கையில் கொண்டுசென்று இருக்கிறது. தொலைபேசியை வைத்தவுடன் தான் தெரிகிறது எனக்கும் அவர்களுக்கும் நடுவே 1000 கீ. மீ தூரம் எங்களை பிரித்து வைத்து இருக்கிறது என்று. அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும், காதலை நினைக்கும் போது, அவர்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பு நான் இந்த வார்த்தையை அடித்து கொண்டிருக்கும் என் மடிகணினியின் மீது நீர் துளியாக விழுகிறது.
பிறப்பாலும், வளர்ப்பாலும் வெவ்வாறு இருந்தாலும், எங்கோ பிறந்து, வளர்ந்து ஒவ்வொரு திசையில் இருந்து வந்து, மொழி தெரியாத, இது வரை வந்திராத ஒரு நகரில் ஒரே வீட்டில் 2 வருடங்களாக குடும்பம் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையேயான காதல் என்னை இந்த நேரத்தில் என்னை இந்த பதிவை எழுத வைக்கிறது.ஆணுக்கும், பெணுக்கும் இடையேயான உறவுகுத்தான் காதல் என்று பெயர் இல்லை. உலகில் உள்ள அனைத்து தூய்மையான உறவுக்கும் பெயர் காதல்தான். எனவேதான் சில வரிகளுக்கு முன்பு "எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையேயான காதல்" என்று எங்கள் நட்பை சொல்லி இருந்தேன். காலையில் அலாரம் அடிப்பது கூட தெரியாமல் தூங்கிவிட்டு பின்பு அடித்து பிடித்து எழுந்து,கிளம்பி குளியல் அறைக்கு சண்டை போட்டு கிளம்பும் போது மாப்பி வரேன், பாஸ் வரேன் என்று சொல்லி விட்டு விட்டில் இருந்து கிளம்பி வேலையே முடித்து விட்டு இரவு வீட்டிற்கு வந்து இரவு 12 அல்லது 1 மணி வரை உலக நியாயம் முதல் உள்ளூர் நியாயம் வரை அடித்து விட்டு தூங்க செல்லும் வரை ஒரு நாளின் 24 மணி நேரத்தில் குறைந்தது 18 மணி நேரம் அவர்களுடுந்தான் செலவிடிகறோம். எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்கள் காட்டும் அன்பு அல்லது காதல்தான் இன்னும் என்னை இந்த ஊரில் வாழ வைத்து கொண்டு இருக்கிறது. இந்த பதிவில் எனது அருமை நண்பர்களை பற்றி மேலோட்டமாகத்தான் சொல்லி உள்ளேன். அவர்களை பற்றியும், என் வாழ்வில் அவர்களது பங்கை பற்றியும் நிறைய எழுதலாம். விரைவில் தனி பதிவில் எழுதுகிறேன்.
மொத்தத்தில் என்னை மட்டும் அல்ல இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனயுமே அழகாக அவர்களது வாழ்கையில் தொய்வுராமல் கொண்டு செல்வது காதல்தான்.

Wednesday, February 10, 2010

DA 06 05 - I always Love IT...




வாழ்கையில் சில விஷயங்கள் போல் சில எண்களையும் நாம் என்றும் நம் நினைவில் வைத்திருப்போம். அந்த எண்கள் நமக்கு பிடித்தவரின் பிறந்த நாளாகவோ, நம் வாழ்வில் நடந்த சில நல்ல விசயங்களின் நாளாகவோ, இல்லை நமது அதிர்ஷ்ட எண்ணாகவோ இருக்ககூடும். அது போல் என் வாழ்கையில் நான் என்றும் மறக்க முடியாத எண் தான் இந்த DA 06 05 ... இந்நேரம் யூகித்து இருப்பிர்கள் இது ஒரு வாகனத்தின் எண் என்று. சரிதான்,.. இந்த பதிவில் இந்த எண்னை தன் பெயராக கொண்ட Pulsar 'ஐ பற்றி சிலவற்றை பகிர்ந்து கொள்ள போகிறேன். எதோ பொல்லாதவன் படத்தில் தனுஷ் போல் pulsar 'ஐ பற்றி ரொம்ப பேசுகிறேன் என்று யோசிகாதிர்கள். ஒவ்வொரு ஆணுக்கும் கண்டிப்பாக பைக் என்றால் கொஞ்சம் ஆசையாக இருக்கும், அதுக்கு நான் மட்டும் விதி விலக்கல. நான் முதன் முதலில் ஒரு பைக்கை நன்றாக கற்று கொண்டதும் இந்த DA 06 05 'ல் தான். 100 கி.மீ வேகத்தில் சென்றதும் இந்த DA 06 05 'ல் தான் .. இதை விட இந்த பைக் என் ஹைதராபாத் வாழ்கையில் என்னுடன் இன்னொரு நண்பன் போல் இருக்கிறது. என் கோபம், சிரிப்பு, அழுகை, வருத்தம் என என் பல உணர்சிகளை இந்த பைக் உணர்ந்து இருக்கிறது. நான் மிகவும் வேதனையாக இருந்த சில கடந்த கால நாள்களில் இவனுடன்(பைக்) தனியாக சென்ற நாட்கள் ஏராளம்.. இவனை எடுத்து கொண்டு யாருக்கும் தெரியாத திசைகளில் யாருக்கும் தெரியாமல் வெகு தூரம் சென்று இருக்கிறன். அந்த நாட்களில் எனக்கு ஆறுதலாக இருந்த சில நண்பர்களில் இவனும்( DA 06 05 )ஒருவன். Thats why i wrote this Post to mention him(06 05) and i can't forget him for my entire life. I Love It (Always)...

பின்க்குறிப்பு: உயிர் அல்லாத இந்த பைக்கை பற்றிய இவ்வளவு பேசும் நான், இந்த பைக்கின் உண்மையான சொந்தக்காரனை பற்றியும், என் பாசக்கார நண்பனைபற்றியும் பேசாமல் இருப்பேனா என்ன? உயிர் அல்லாத இந்த பைக்'கே என் வாழ்கையில் இவ்வளவு துணையாக இருக்கிறது என்றால் என் உயிரான என் நண்பன் எனக்கு எவ்வளவு துணையாக இருந்திருப்பான்.. அவனை பற்றி எழுத வார்த்தைகளை தேடி கொண்டு இருக்கிறேன்.. மிக விரைவில் எழுதுவேன்...

Sunday, February 7, 2010

Modern Youth's....



கால்களில் ரீபாக்,
கைகளில் ராடோ,
கண்ணில் ரே பான்,
தலை முடியில் செட் வெட்,
நறுமணத்திற்கு எக்ஸ்,
நோக்கியா / சோனி எரிக்ஸ்சொன் அலை பேசிகள்...
உடுத்தும் உடைகளில் பான் அமெரிக்கா / குரோகொடய்ல் / ஜாக்கி / ஒசேம்பெர்க்...
மடி கணிணியோ டெல் / ஹட்ச் பீ / எசேர் .....
இவை அனைத்தையும் சரியாக அழகாக எடுத்துக்கொண்டும், உடுத்திக்கொண்டும்
மென்பொருள் பொறியாளன் என சொல்லி கொண்டு
அயல் நாட்டு வங்கிக்கோ, தொழில் மணைக்கோ, இன்சூரன்ஸ் காபகத்துக்கோ மென்பொருள் செய்து கொடுத்து,
கே எப் சி / பிசா ஹுட்'லோ உணவு எடுத்து கொண்டு
ஆப்பிள் ஐ பாடில் இசை கேட்டு கொண்டும்
சாலையில் நடந்து செல்கையில் சாலை ஓர கடைகளையும், மனிதர்களையும் பார்த்து
ஏன் இன்னும் இந்தியா முன்னேறவில்லை? என கூறும் நமக்கு என்று
உண்மை உரைக்க போகிறது, இந்தியா ஏன் இன்னும் முன்னேறவில்லை என்று ????
"சிந்திப்போமாக"....

ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை!



*** Words from CBhagat in 2States ***
Love marriages around the world are simple:
Boy loves girl. Girl loves boy.
They get married.
In India, there are a few more steps:
Boy loves Girl. Girl loves Boy.
Girl's family has to love boy. Boy's family has to love girl.
Girl's Family has to love Boy's Family. Boy's family has to love girl's family.
Girl and Boy still love each other. They get married.

*** Words from Ivan***
In Southern part of India, there are few more steps:
Boy loves Girl. Girl loves Boy.
Girl's family has to love boy. Boy's family has to love girl.
Girl's Family has to love Boy's Family. Boy's family has to love girl's family.
And most importantly for God's Sake Both Family should be of same Caste and Religion..
Girl and Boy still love each other. They get married.

Who the F**k invented this F***ing System...

Why am I here?


"Somethings" in this world can't be separated from one's individual life and those are the things which fits into our day to day conversations and provides us to make moments in our life more lively and interesting.

For sure, each and every one lived/living/ will live with those things in your life. So here i am sharing those things which reflects in my life.

Since this entire world is only acts upon expressions, You can find some posts which will be helpful or some else informative or some else boring and so on expressions..

I am trying my best to keep your time valuable while you are in this blog...

There is a famous say: " Expressions and thoughts are more expressive only expressed in mother tongue(MT)" - As liable to this, you can find most of the thoughts reflecting here will be in my MT.

And damn i forgot to mention those "Somethings". Yep some of the somethings are;

Friends
Movies
Sports
Politics
and more....

Now Find and replace "Somethings" with above things and read this post once again....

Come on, Let's start....
Related Posts with Thumbnails